Also Watch
Read this
By: Web Team

நவராத்திரி விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் கொலு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பெண் பக்தர்கள் தாமரை, மல்லிகை, முல்லை, வாடாமல்லி, செவ்வரளி, சாமந்தி உள்ளிட்ட பல வண்ண மலர்களை கொண்டு வந்து அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.