Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்ததால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக உதகை ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
காலை முதலே வெயில் அடித்த நிலையில், தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் உதகை படகு இல்லத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் படகு இல்லத்திற்கு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதையும் படியுங்கள் : வயல்கள் வெடிப்பு விட்டு பயிர்கள் காய்ந்து போகும் நிலை..!