Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர் மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் பிலால்நகர், புதுமனை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில்,
பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் அவ்வழியே செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.
மேலும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved