Also Watch
Read this
By: Web Team

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கிடங்குகளில் சோதனை செய்து 6 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய 15 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ததாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மூன்று இடங்களில் சோதனை நடத்தி 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved