Also Watch
Read this
By: Web Team

சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளத்தில் குடியிருப்பு ஒன்றின் மின்தூக்கி பழுதாகி பாதி வழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது. மூலக்கொத்தளம் ராமதாஸ் நகர்பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்தூக்கி சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், அதில் சென்ற 3 பெண்கள் உள்ளே சிக்கிக்கொண்டு பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட சக குடியிருப்பு வாசிகள் போராடி மூவரையும் வெளியே மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved