Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு மூதாட்டி உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆராசூர் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் மாளிகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பைக்கில் சென்ற இருவர் காயமடைந்தனர். அதே போல் மாம்பட்டு கிராமம் அருகே காரும், ஜீப்பும் மோதி கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.