Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை அருகே, டிட்வா புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த கால்நடைக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெற்ற விவசாயிடம் கமிஷனாக மூவாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலரான ஜெயபிரகாஷ் என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷிடம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved