Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை ரோட்டில் சாமி படங்கள் விற்பனை செய்யும் கடைக்கு வந்த தம்பதி, சாமி படத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடை உரிமையாளர் செந்தில்குமார் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றிருந்தபோது வந்த தம்பதி சிறிய முருகன் படத்தை திருடி அதனை பைக்கில் மறைத்து வைத்தனர். செந்தில்குமார் வந்தவுடன் 5 படங்களை வாங்கிக் கொண்டு ஜிபேயில் பணம் அனுப்பி விட்டோம் சொல்லி விட்டு சென்ற நிலையில், பணம் வராததால் சந்தேகப்பட்டு சிசிடிவி பதிவை ஆய்வு செய்ததில் திருட்டு தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved