Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரில் உள்ள அமலிநகர் மீனவ கிராமத்தில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் 40க்கும் மேற்பட்டவை மண்ணரிப்பால் சேதம் அடைந்ததாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அலையின் சீற்றத்தால் படகுகளில் இருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், 54 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு சேதமடைந்ததாகவும் தெரிவித்த மீனவர்கள், மண்ணரிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கடற்கரையோரம் தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved