Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தென்றல் நகரில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசும், நிலையில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கேக்கரை பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சில வாரங்களாக முறையாக இயங்காததால் ஆங்காங்கே குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. உடனடியாக அடைப்புகளை நீக்கி கழிவு நீர் தடையில்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved