Also Watch
Read this
By: Fyrose Banu

ராமேஸ்வரம் நகர் பகுதியில் விநியோகப்படும் காவேரி குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருவதை கண்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு தண்ணீர் ஊற்றி கண்டனத்தை தெரிவித்தனர். ராமேஸ்வரம் நகர் பகுதிக்கு காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் என் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


குடிநீரில் கலந்துள்ள சாக்கடை நீர்
இந்நிலையில், இன்று ராமர் தீர்த்தம் தெற்கு பகுதியில் வழங்கப்பட்ட தண்ணீரில் சாக்கடை துர்நாற்றம் வீசி குடிநீரும் கலங்களாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின் நகராட்சி அலுவலகத்தில் சென்று தண்ணீரை அலுவலகம் முன்பு ஊற்றி தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். 
நோய் தொற்று பரவும் அபாயம்
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை என தெரிவித்த அப்பகுதி மக்கள் தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved