Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே ரோந்து சென்ற எஸ்.ஐ-யின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரில் மோதியதில், உதவிக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எஸ்.ஐ உட்பட 4 பேர் காயமடைந்தனர். மணல் கொள்ளை தொடர்பான ரகசிய தகவலை அடுத்து எட்டையபுரம் உதவி ஆய்வாளர் மாதவராஜா,
தனது சொந்த காரில் காவலர் அற்புதசாமி, அதே பகுதியை சேர்ந்த அருண் குமார், ராஜா, கார்த்திக் ஆகியோரை அழைத்துக் கொண்டு ரோந்து சென்றார்.
ரோந்து பணிகளை முடித்து விட்டு திரும்பிய வழியில், சிந்தலக்கரை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவிலுள்ள தடுப்புச்சுவரில் மோதி எதிர்ப்புற சாலையோரம் கவிழ்ந்ததில், அருண்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved