Also Watch
Read this
By: Web Team

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் நீராடிய பக்தர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், நண்பர்
மதிவாணனுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார்.
சாமி தரிசனத்திற்கு முன்னதாக இருவரும் கடலில் நீராடியபோது மணிகண்டன் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கினார். இதனை கண்ட பாதுகாப்பு குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையும் படியுங்கள் : இரவில் சுமார் 1 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved