Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட 100 இடங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து, மாவட்ட எஸ்.பி. சுஜாதா பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஈரோடு காளை மாடு சிலை சந்திப்பு வழியாக, வந்த வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ஏற்கனவே, தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி வந்த பலருக்கு, இனிப்புகளை வழங்கி கௌரவித்த எஸ்.பி. சுஜாதா, பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved