Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உடல் நலக்குறைவால் உயிரிழந்த 10 வயது சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பந்தநல்லூர் அருகே அரசரடி கிராமத்தை சேர்ந்த தங்கராசுவின் மகள் தர்ஷிகா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரின் உடலை மண்ணியாற்றின் கரையோரம் உள்ள மயானத்தில் புதைத்த உறவினர்கள், இன்று காலை சடங்குகள் செய்வதற்காக அங்கு சென்றபோது, சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved