Also Watch
Read this
By: Web Team

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, கிரேன் மூலம் மாலை அணிவித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வழக்கில், அக்கட்சி நிர்வாகிகள் மூன்று பேர் திருவாரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
கடந்த 20ஆம் தேதி விஜய் திருவாரூர் தெற்கு வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் கிரேன் மூலம் மாலை அணிவிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் மதன், கிரேன் இயந்திர உரிமையாளர் ராஜேஷ், தவெக நிர்வாகிகள் அன்பு மற்றும் மனோ மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், மதன், அன்பு, மனோ ஆகியோர் சரணடைந்தனர்.