Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவியின் தந்தை தனியார் டிவி செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது.
முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளவர் சிந்து லேகா.
இவரது தந்தை தனசேகரன் வரதராஜபுரத்தில் உள்ள ஓர் இடத்தை போலி பத்திரம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் துணை ஆணையாளரிடம் புகார் அளித்தனர்.
இது தனியார் தொலைக்காட்சியில் செய்தியாக வந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவியின் தந்தை தனசேகரன், அந்த செய்தியாளரை தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் அளித்த புகாரில் தனசேகரன் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved