Also Watch
Read this
By: Web Team

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் மறைந்த ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு ஆயிரத்து137.97 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
இவர்களுக்கான ஓய்வுகால பண பலன்களை வழங்கக்கோரி, தமிழக அரசிடம் போக்குவரத்து துறை 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய் நிதியை கேட்டிருந்தது.
இதில் முதற்கட்டமாக 1,137.97 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள எட்டு போக்குவரத்து கழகங்களுக்கு இந்த நிதி பிரித்து வழங்கப்பட உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved