Also Watch
Read this
By: Web Team

திருச்செந்தூர் அருகே தொடர் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குலசேகரன்பட்டினம் அண்ணா சாலை பகுதியில் முருகேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், மழைக்கு அதிக ஈரப்பதத்துடன் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் முருகன் அவருடைய மனைவி மற்றும் மகன் மூன்று பேரும் காயமடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved