Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளா கிராமத்தில் கனமழையால் ஊறி போன ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி பலியானார். கார்த்திகை செல்வம் என்பவர் குடும்பத்தினருடன் இரவில் தூங்கி கொண்டிருந்த போது, அவரது வீட்டின் மீது பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியதில் கார்த்திகை செல்வம் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், அவரது மனைவி ஜெயமாலினி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved