Also Watch
Read this
By: Web Team

கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் பயனற்று கிடந்த நீர்த்தேக்க தொட்டியை இடிக்கும் பணியின் போது, அருகில் இருந்த வீட்டில் சாய்ந்து வீடு சேதமடைந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீராவிஜயகுமார் என்பவரின் வீட்டில் பக்கவாட்டு பகுதியில் எதிர்பாராத விதமாக நீர் தேக்க தொட்டி சாய்ந்ததில் வீடு பலத்த சேதம் அடைந்தது. வீட்டின் உரிமையாளர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், மாநகராட்சியின் அனுமதியின்றி இப்பணி நடைபெற்றதாகவும், காவல்துறையில் சம்பந்தப் பட்டவர்கள் மீது புகார் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved