Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வட்டமலை பகுதியில் 6 கடைகளில் திருட்டு நடந்த நிலையில், அதிகாலை நேரத்தில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபர் பூட்டை உடைத்து கடையில் புகுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.மளிகைக்கடை, தேநீர் கடை, சலூன், மருந்துக்கடை உள்பட அடுத்தடுத்து உள்ள கடைகளில் மொத்தம் 60 ஆயிரம் ரூபாயும், விலை உயர்ந்த செல்போன் ஒன்றும் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் போலீசார் ரோந்து வருவதில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved