Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அமைந்துள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி கோயிலில், தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளல் நடைபெற்று, தெப்பத்தில் மூன்று முறை சுற்றி வந்தனர்.

பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவி்ல் திருக்கருக்காவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்தில் வலம் வந்த சுவாமியை கண்டு மகிழ்ந்து தரிசனம் செய்து வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved