Also Watch
Read this
By: Fyrose Banu

தவெக தலைமையில் ஒற்றுமையில் இல்லை என்றும் கட்சியை வளர்க்க தவெக நிர்வாகிகளை சீர்ப்படுத்த வேண்டும் எனவும் பர்கூரில் தவெகவில் இருந்து விலகி திமுக இணைந்த மகளிர் அணி நிர்வாகி மீனா ஹரிஷ் தெரிவித்தார்.
திமுகவில் இணைந்த தவெக நிர்வாகி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இன்று தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில் தவெகவின் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் மீனா ஹரிஷ் தலைமையில் 200க்கும் மேற்ப்பட்ட நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார்.

தவெக நிர்வாகிகள் ஒற்றுமையாக இல்லை
அப்போது பேசிய மீனா தவெகவில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றிய நான் கற்று கொண்டது இன்னும் தவெக நிர்வாகிகள் அரசியல் களத்தில் ஒற்றுமையாக இல்லை. கலை நிகழ்ச்சி வைத்தால் கூட கூட்டம் கூடும் என்பதால் நடிகர்களுக்கு கூடும் கூட்டம் பெரியதாக தாக்கதை ஏற்படுத்தாது. தவெக நிர்வாகிகளை தலைமை சீரமைத்து அரசியல் கற்று கொடுக்க வேண்டும் என கூறினார். இதில் தவெகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved