Also Watch
Read this
By: Manigandan Raja

அதிகாரத்தில் உள்ளனர் :
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு நலச்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்,
டிஜிட்டல் பற்றி தெரியாத எங்களை வீட்டில் உட்கார வைத்து விட்டார்கள். டிஜிட்டல் பற்றி தெரிந்தவர்கள் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
தற்பொழுது நடந்த சட்டசபை தேர்தலில் கிடைத்த தீர்ப்பு. இது யாருடைய தீர்ப்பு… காலத்தின் தீர்ப்பு… இயற்கையின் தீர்ப்பு…
கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்தோம்.. 150 நாட்கள் சலிப்பின்றி மக்களுக்கு கொரோனா காலத்தில் உணவு வழங்கினோம்… உதயகுமார் தனது கவலையை பகிர்ந்து கொள்கிறார் என நினைக்க வேண்டாம்…
நான் மீண்டும் சொல்லுகிறேன்.. மிகவும் உயர்ந்த அதிகாரம் உள்ள பகுதி பிரதமர் பதவி, குடியரசுத்தாலைவர், குடியரசு துணைத்தாலைவர் தமிழ்நாட்டுக்கு வந்தாலஅவர்களுடன் பயணம் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் பெற்று உள்ளேன்..
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நான் பல நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன். ஆண்டிபட்டியில் இருந்து அமெரிக்கா வரை அரசு பயணம் மேற்கொண்டு உள்ளேன்..
நடக்க வேண்டியது… நடந்தே தீரும்…அதை யாரும் தடுக்க முடியாது.
புதிய மனிதராக , நடப்பதை ஏற்கும் பக்குவத்தை அறிந்தால் தான் புதிய மனிதராக முடியும். மனபாரம் குறைந்து விடும்… அமைச்சர் பதவியை, சட்டமன்ற உறுப்பினர் பதவியை, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை இழந்தாலும் கூட நான் புதிய மனிதராக மாறி இருப்பதால் நடப்பதை ஏற்கும் பக்குவத்தை அடைந்து உள்ளேன்.
இருப்பதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலை வேண்டும் ..அதனால்தான் நான் உங்களுடன் இருக்கிறேன் … மூன்றாவது முறையாக நான் திருமங்கலத்தில் ஏன் வெற்ஆனால் அது அசட்டுத்தனமானது என தெரிய வருகிறது… அறிவு மூன்றாவது முறையாக வெற்றி பெறவில்லை.
ஒருவரது வெற்றிக்குப் பிறகு அவருடைய அறிவு ஏன் அடுத்தடுத்து அவர்களுக்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை … வருவது, வெற்றியோ, தோல்வியோ இன்பமோ, துன்பமோ, எதுவானாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved