Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகமானதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால், அருவியில் குளிப்பதற்கு கடந்த 4 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மழைப்பொழிவு குறைந்ததால், அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில், திடீரென அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து, சுருளி அருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டதால், ஆடி அமாவாசையை ஒட்டி அருவியில் நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved