Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், கூகுள் வரைபடம் பார்த்து கிளைச் சாலைகளில் சென்ற வாகனங்கள் செங்குத்தான சாலையில் ஏற முடியாமல் பழுதாகி நின்றன.
கடந்த மூன்று நாள் தொடர் விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க, எந்த வழியாக சென்றால் சரியாக இருக்கும் என நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved