Also Watch
Read this
By: Web Team

380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை, வரும் 26 அல்லது 27ஆம் தேதிகளில் பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 381 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன.
1350 மீட்டர் ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டர் நீள ஓடுதளமாக மாற்றப்பட்டது. ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், பல்வேறு வசதிகளுடனும் விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது. அதனை வரும் 26, 27ஆம் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, நேரில் திறந்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved