Also Watch
Read this
By: Web Team

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவின்போது வடை மாலை சாத்துவதற்காக ஒரு லட்சத்து எட்டு வடைகள் சுடும் பணி தொடங்கியது. இந்தாண்டு வரும் 19 ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், நாமக்கலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்டமான 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படும். இதற்காக 2250 கிலோ உளுந்து மாவு 32 கிலோ மிளகு 32 கிலோ சீரகம் கொண்டு வடை சுடும் பணியானது கோவில் வளாகத்தில் தொடங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved