Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பட்டா மாறுதலுக்கு 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். பரமக்குடியை சேர்ந்த ஒருவர் தனது தாயார் பெயரில், வேந்தோணி கிராமத்தில் உள்ள இடத்தை பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலராக உள்ள கருப்பசாமி பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டு இறுதியாக 13 ஆயிரத்திற்கு ஒத்து கொண்டு, லஞ்ச பணத்தை பெற்றப்போது மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved