Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் சாலை அகரம் கிராமத்தில் பட்டா மாறுதல் செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர், கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
அண்ணாமலை என்பவர் தனது மகள் அருள் பிரபாவுக்காக வாங்கிய வீட்டு மனைக்கு, பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பித்த நிலையில், விஏஓ சதீஷ் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
20 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்ட அண்ணாமலை, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். அவர்களது அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்த போது, விஏஓ சதீஷ் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.