Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை அருகே நில அபகரிப்பு புகாரில் வருவாய்துறை அதிகாரிகள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, பாதிக்கப்பட்ட நபர் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டமங்கலத்தை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தியின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பெண் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போலி ஆவணங்களை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ள நிலையில், நிலத்தை மீட்டு தர வருவாய் துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்க வில்லை என தீபன் சக்கரவர்த்தி குற்றம்சாட்டினார்.