Also Watch
Read this
By: Web Team

பாஜகவின் நெருக்கடியால் வீடியோ வெளியிட்டு திசைதிருப்பும் முயற்சியில் விஜய் இறங்கி இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் குற்றம்சாட்டினார். அரியலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கரூர் சம்பவம் தமிழ்நாட்டில் ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என உணர்த்தி இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், மக்களை திசை திருப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்கிற முயற்சியில் தவெகவும், ஆதவ் அர்ஜுனாவும், பின்னணியில் பாஜகவும் இருப்பது வெளிப்படையாகவே தெரிவதாகக் குற்றம்சாட்டினார்.