Also Watch
Read this
By: Web Team

சேலத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை நடத்தி 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த வழக்கில் கைதான விஜயபானு மற்றும் உதவியாளர்கள் இருவருக்கு, வேறு ஒரு வழக்கில் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2012ஆம் ஆண்டு வேறு வழக்கில் சிறையில் இருந்த விஜயபானு, தான் ஐபிஎஸ் அதிகாரி என்றும், சிறையில் பாலியல் நடக்கும் தவறுகளை கண்டறிய வந்ததாக சிறைவார்டன் விதேச்சனாவை நம்ப வைத்துள்ளார். பிறகு ஜாமீனில் வெளியே வந்த விஜயபானு விதேச்சனாவிடம் நட்பாக பழகி பதவி உயர்வு வாங்கித் தருவதாக ஆசைகாட்டி 22 சவரன் தங்க நகை, 5 லட்சம் பணம் மோசடி செய்தார்.13 ஆண்டுகளாக நடந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved