Also Watch
Read this
By: Web Team
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பெய்யும் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்,சென்னை தி. நகர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம், காமராஜர் சாலை, எழும்பூர், புதுப்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் மெரினா கடற்கரைக்கு செல்ல இரண்டாவது நாளாக இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved