Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே முல்லைப் பெரியாற்றில் குளிக்கும்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு பாலத்தின் அடியில் தவித்த பெண்ணை, இளைஞர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி கயிறு கட்டி மீட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1,200 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆற்றில் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
எச்சரிக்கையையும் மீறி, தன் நண்பர்களுடன் குளித்த இளம் பெண் ஆபத்தில் சிக்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved