Also Watch
Read this
By: Manigandan Raja

பெண்கள் முற்றுகை போராட்டம் :
தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வழி தடங்கள் பள்ளி மற்றும் கல்லூரி அருகே உள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட அரசு டாஸ்மார்க் கடைகளை அகற்றி வரும் பணியை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது விற்பனையாளரிடம் சென்று கடையை மூட வேண்டும் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது அப்பகுதி பெண்கள் கூறுகையில் இங்கு மதுபான கடை இயங்குவதால் சாலையிலே அமர்ந்து மது அருந்துகின்றனர்.
இதனால் போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளதாகவும் அருகே இரண்டு பள்ளிக்கூடங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர் மேலும் என்னுடைய 25 உடைய பையன் மது அருந்திய இறந்து விட்டான் அவன் இறந்த ஐந்தே மாதத்தில் என்னுடைய கணவரும் இறந்து விட்டார் இதனால் நான் தனி மரமாக இருக்கிறேன்.
வருகின்ற காலங்களில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக இருக்கக் கூடாது என் நிலைமை யாருக்கும் வரவும் கூடாது எனவும் தெரிவித்தனர்.மேலும் எந்த ஊரில் டாஸ்மார்க் அகற்றினாலும் அகற்றாவிட்டாலும் எங்க ஊரில் டாஸ்மார்க் கடையை அகற்ற வேண்டும் அப்படி அகற்றினால் அடுத்த முதல்வரும் நீங்கதான் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved