Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கியால் கோழியை சுட முயன்றபோது, குறி தவறி குண்டு பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார். சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த மேல்மதூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, தன்னுடைய மருமகனுக்கு குழம்பு வைப்பதற்காக கோழியை சுட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், குறி தவறி பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷ் என்பவரின் தலையில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணாமலையை கைது செய்த போலீசார், உண்மையிலேயே குறி தவறியதா அல்லது முன்விரோதம் காரணமாக கொலையா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.