Also Watch
Read this
By: Manigandan Raja

பக்கெட், பாட்டில்கள், கேன்களில் பாலை பிடித்து சென்ற மக்கள் :
ராஜஸ்தானில் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து கொட்டிய ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை பொதுமக்கள் பக்கெட், பாட்டில்கள் மற்றும் பெரிய கேன்களில் பிடித்து சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. டெல்லி - ஜெய்பூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பால் டேங்கர் லாரி ஹோட்டல் அருகே கவிழ்ந்தது.
ஆடைகளை 1 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பரவிய வதந்தி :

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள வணிக வளாகத்திலுள்ள கடை ஒன்றில், ஆடைகளை 1 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பரவிய வதந்தியால் பெருங்கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடை திறப்பதற்கு முன்பே ஏராளமான வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்திற்கு வெளியே கூடியதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸார் தலையிட்டு, தள்ளுபடி சலுகை எதுவும் இல்லை என்று அறிவிப்புகள் மூலம் தெளிவுபடுத்திய பின்பேகூட்டம் அமைதியாக கலைந்து சென்றது.
"காசாவில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்கிறது" :

(Courtesy : ANI)
காசாவில் இஸ்ரேல் ராணுவம் செய்து வரும் இனப்படுகொலையை மத்திய பாஜக அரசு மவுனமாக வேடிக்கை பார்த்து வருவதாகவும், செயலற்றதாக உள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையில், இஸ்ரேல் ராணுவத்தின் பதில் நடவடிக்கை அத்துமீறிய கொடுமை மற்றும் காட்டுமிராண்டித்தனம் நிறைந்தது என விமர்சனம் செய்துள்ளார்.