Also Watch
Read this
By: Web Team

பஞ்சாபில் விவசாய கழிவுகளை தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடப்பு பருவத்தில் மட்டும் இது தொடர்பாக 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை 75 வழக்குகளில் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி விவசாய கழிவுகளை எரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் பஞ்சாப் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், புதன்கிழமை அன்று ஒரே நாளில் மட்டும் இது தொடர்பாக 31 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதிகபட்சமாக அமிர்தசரஸ் மாவட்டத்தில் மட்டும் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved