Also Watch
Read this
By: Web Team

நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அதிக மதிப்புடைய 500 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், உயர் மதிப்புடைய நோட்டுகளாக 100 மற்றும் 200 ரூபாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர், தேர்தலில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்றார். தொடர்ந்து, வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து கருத்து கூறியவர், முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினருக்கும் தெலுங்கு தேசம் ஆதரவான கட்சி என்று தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved