Also Watch
Read this
By: Web Team

வக்ப் வாரிய திருத்த சட்டம், அரசியலமைப்பின் படி செல்லாது என தாக்கலான பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த வக்ப் நிர்வாகம், அதிகாரம் மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் புதிய சட்டங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன் படி அனைத்து மாநிலங்களிலும் உள்ள வக்ப் சொத்துகளை கண்டறிந்து கண்காணிக்க centralised portal and database உருவாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை சேர்ந்த இணைச் செயலாளர் ஒருவர் இதை கண்காணிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர்ட்டல் மூலம் எல்லா வக்ப் சொத்துகளுக்கும் தனிப்பட்ட அடையாள எண்கள் தாமாகவே உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved