Also Watch
Read this
By: Web Team

காங்கிரஸில் பாதுகாப்பற்ற தலைமையால் அக்கட்சியின் புத்திசாலி மற்றும் இளம் எம்பிக்கள் விவாதங்களில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.
மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு சபாநாயகர் ஓம் பிர்லாவின் அலுவலகத்தில் நடைபெற்ற வழக்கமான முறைசாரா தலைவர்களின் கூட்டத்தில், பிரதமர் மோடி இந்தக் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் புறக்கணித்ததால் இது குறித்து அவையில் விவாதிக்க முடியாததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved