Also Watch
Read this
By: Web Team

நாட்டின் முதலாவது மனநல தூதராக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.உலக மனநில தினத்தில், டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டாவை சந்தித்த தீபிகா படுகோன் இந்த புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அவர், நாடு முழுவதும் உள்ள மனநல மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தமது இன்ஸ்டா பதிவில், நாட்டின் முதலாவது மனநல தூதராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருப்பது தமக்கு பெருமை அளிப்பதாக தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். இது தமக்கும் பெருமை சேர்ப்பதாக அவரது கணவர் நடிகர் ரன்வீர் சிங்கும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : பீகாரில் காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடரும் இழுபறி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved