மனித-விலங்கு மோதலை தணிக்க முயற்சி : கேரள மாநிலம் கண்ணூரில் அதிகரித்து வரும் மனித-விலங்கு மோதலை தணிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக வனத்துறை மற்றும் போலீசார் இணைந்து "ஆபரேஷன் கஜமுக்தி" நடவடிக்கை மூலம் 2 யானைகளை அடர் வனத்திற்குள் விரட்டினர். அதன்படி, ஆரளம் வனவிலங்கு சரணாலயம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டிருந்த 2 யானைகள், நீண்ட போராட்டத்திற்குப் பின் அடர் வனத்திற்குள் விரட்டப்பட்டது. யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதை தடுக்கவும், பொதுமக்கள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யுவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது. Related Link ரிதாலா குடிசைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து