Also Watch
Read this
By: Web Team

பாஜகவுக்கு ஆதரவாக பீகாரில் வாக்காளர் பட்டியலை திருத்தும் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இந்திய தேர்தல் ஆணையம், இதே போன்ற திருத்தத்தை மேற்கு வங்கம் மற்றும் டெல்லியிலும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு மாநிலங்களிலும் முறையே 2002 மற்றும் 2008 ல் கடைசியாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டது.
எனவே வரும் ஆகஸ்ட் மாதம் அவை திருத்தம் செய்யப்படலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லியில் 2008 மார்ச் 16 ஆம் தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட அனைவர் குறித்தும் சோதனை செய்யப்படும் எனவும், அவர்கள் தங்களது குடியுரிமை ஆதாரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே வாக்காளர்களாக தொடர முடியும் எனவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved