Also Watch
Read this
By: Web Team

திருப்பதியில் லட்டு தயாரிப்பில் நடந்த மோசடியை தொடர்ந்து தற்போது மற்றுமொரு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏழுமலையானை தரிசிக்க வரும் விஐபிக்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் தரப்பில் பட்டு நூலினால் நெய்யப்பட்ட பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்வது வழக்கம். இதற்காக குறிப்பிட்ட தொகை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது பட்டு துணிக்கு பதில் பாலிஸ்டர் துணியினால் தயாரிக்கப்பட்ட பொன்னாடையை கொள்முதல் செய்து போலியாக கணக்கு காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved