Also Watch
Read this
By: Web Team

மும்பையில் கடந்த 84 மணி நேரத்தில் 50 சென்டி மீட்டருக்கும் அதிகமாக கனமழை இடைவிடாது கொட்டித் தீர்த்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விடாது பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
செம்பூர், தாதர், ஹிந்த்மாதா, அந்தேரி மற்றும் கிங்ஸ் சர்க்கிள் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மேலும் அந்தேரி பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved