Also Watch
Read this
By: Web Team

சிந்து நதி நீரை இந்தியா தடுத்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பிரம்மபுத்திராவின் நீரை சீனா தடுக்கும் என்ற பாகிஸ்தானின் மிரட்டலுக்கு அசாம் முதல்வர் பதிலளித்துள்ளார்.
தமது நட்பு நாடான சீனா பிரம்மபுத்திராவின் நீரை தடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் மூத்த ஆலோசகர் ஒருவர் மிரட்டல் விடுத்தார்.
அதற்கு, சீனா, பிரம்மபுத்திரா நீரை தடுத்தால் அது வடகிழக்கு மாநிலங்களுக்கு நல்லது என்றும், பருவமழை காலத்தில் ஏற்படும் அபரிதமான வெள்ளப்பெருக்கை தடுக்க அது உதவும் எனவும் அசாம் முதல்வர் கூறியுள்ளார்.
இது குறித்த தமது எக்ஸ் பதிவில், பிரம்மபுத்திராவின் நீரில் 35 சதவிகிதம் மட்டுமே சீனாவின் தரப்பில் உள்ளதாகவும், எஞ்சிய 65 சதவிகிதம் இந்தியாவிலேயே உற்பத்தி ஆவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved