Also Watch
Read this
By: Manigandan Raja

குழிதோண்டி புதைக்கப்படும் இந்திய ஜனநாயகம் :
பாஜகவால் இந்திய ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். SIR பணிகள் காரணமாக மாநிலத்தில் 66 லட்சத்து 63 ஆயிரம் பேர் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து.
கொல்கத்தாவில் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தேர்தலில் நியாயமாக வெற்றிபெற விரும்பினால் நீக்கப்பட்ட மக்கள் வாக்களிக்கும் உரிமையை திருப்பித் தர வேண்டும் என்றார். பெயர்களை நீக்குவதன் மூலமும், வாக்குரிமையை பறிப்பதன் மூலமும் வாக்குகளை பெறலாம் என பாஜக நினைத்தால் மத்தியில் ஆட்சியில் இருந்து நிச்சயம் வெளியேற்றப்படும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved